திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் தொடர்ந்து மதுபானங்கள் மற்றும் போதை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்று தொடர்ந்து பொது மக்கள் புகார் கூறி வரும் நிலையில் பூண்டி ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் பட்டப்பகலில் மது பானங்களை அரசு அனுமதியின்றி கள்ளச்சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள் மாவட்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து மேல்மலை பகுதியான பூம்பாறை,கூக்கால் .பழம்புத்தூர். கிளாவரை. பூண்டி கவுஞ்சி, பேலூர் முதல் அனைத்து மலை கிராம பகுதிகளிலும் மதுபானம் உட்பட பல்வேறு போதை பொருட்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் தற்போது மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது

