கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர் படகில் பழனி , கேசவன் , திருமால் ஆகிய மூன்று மீனவர்களும் கடந்த 2 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு ஆறு காட்டுத்துறை, கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். மாலை 5 மணியளவில் பழனி என்பவர் கடலில் தவறி விழுந்துவிட்டார். இவர்கள் சென்ற படகை தேடி ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடந்த 5 தினங்களாக படகுகளில் சென்று தேடி வந்தனர் .
இந்நிலையில் தற்போது இவரின் பிரேதம் இலங்கை காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வந்ததையடுத்து மேல் நடவடிக்கை குறித்து மீன்வளத்துறையிரை உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர் .
மேலும் இலங்கை , காரைநகர் பகுதியிலேயே உடற்கூராய்வு சோதனை நடைபெற்று அங்கேயே அடக்கம் செய்யப்படும் என தெரியவருகிறது .
5 நாட்களுக்கு முன்பாக கடலில் தவறிவிழுந்த தமிழக மீனவர் இலங்கை , காரைநகர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட. செய்தியாளர்.

