புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை
அகற்ற கிராம மக்கள் தீர்மானம் .
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள இறால் வளர்ப்பு குட்டைகளில் சுமார் 300 அடி ஆழம் வரை ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உப்புநீர் சுமார் நான்கடி உயரம் வரை சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஊரில் உள்ள விவசாய நிலங்களும் குடிநீர் ஆதாரங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இறால் பண்ணைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புஷ்பவனம் நண்பர்கள் குழுவினர் ஏற்பாட்டில் ஊர் மக்கள் கோயில் வளாகத்தில் கூடினர்.
இறால் பண்ணைகள் அமைக்க உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா .? இறால் பண்ணைகளால் பாதிப்பு குறித்த விவரங்கள் … . கிராம மக்களிடையே கருத்து கேட்பு என குழு தகவல்கள் பெற்று வருகிற கிராம சபா கூட்டத்தில் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஊர் மக்கள் கலந்து கொண்டனர் .

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

