• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!

policeseithitv by policeseithitv
October 31, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை
மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான
டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!
———————————
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது.
மூன்று கட்டமாக
நடைபெற்ற இந்த தேர்தலில்
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் அக்.20 ஆம் தேதி நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று காலையில் நாசரேத் மர்காஷிஸ் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சிற்றாலயத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் தேவசகாயம் தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. பின்னர் மர்காஷிஸ் கலைக்கல்லூரி கலை அரங்கத்தில் காலை 9 மணி அளவில் தொடங்கிய வாக்களிக்கும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என 2 அணிகளாக போட்டியிட்டனர். இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பின்னர் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன்,, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன்., குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக். பொருளாளர் வேட்பாளர் மோகன்ராஜ் அருமை நாயகம்ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருமண்டல தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில்
சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து மூன்றாவது கட்ட தேர்தல் கடந்த
20ம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினம் மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையும், சுமூகமாக நடைபெற்றதாக திருமண்டல சபையார் தெரிவித்தனர்.
நிர்வாகிஸ்தர் தேர்தலில்
டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்.

மறுநாள் 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினத்திலிருந்து பிஷப் தேவசகாயம் கால்டுவெல் பள்ளியில் உள்ள பிஷப் இல்லத்திற்கும் அவரது அலுவலகத்திற்கு வராமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த
22.10.2021 அன்று சினாட் பொதுச்செயலாளர் அட்வகேட் பெர்னான்ட்ஸ் ரத்தினராஜா, பேராயர் தேவசகாயத்திற்கு கடிதம் அனுப்பி தாங்கள் தென்னிந்திய திருச்சபை சட்டத்தை மீறி நடந்திருப்பது தவறு என்றும், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட டி.எஸ்.எப் அணியினரோடு இணக்கமாக செல்ல அறிவுறுத்தினார். சினாட் பொதுச்செயலாளரின் கடிதத்தையும் மீறிய பேராயர் தேவசகாயம் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகத்தை செயல்பட விடாமல் ஸ்தம்பிக்க வைத்ததாக நிர்வாகஸ்தர்கள் மத்தியில் பேசப்பட்டது. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்.
திருமண்டலத்தை மீட்டெடுக்க போராடி வரும் டி.எஸ்.எப் அணியினர், இங்கு நடைபெற்ற அனைத்து தகவல்களையும் பிரதம பேராயரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரியவருகிறது.
அதன்பேரில், முழுமையாக விசாரணையை பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் மேற்கொண்டதாகவும், அதனடிப்படையில் 28.10.2021 அன்று விரிவான கடிதத்தை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயத்திற்கு அனுப்பியிருக்கிறார். அதில் பேராயரின் நடவடிக்கைகள் அனைத்தும், தென்னிந்திய திருச்சபை சட்டத்திற்கு புறம்பாணது எனவும், சட்டத்தை மீறி செயல்பட்டதோடு, நிர்வாக கமிட்டி என்ற ஒன்று இல்லாத நிலையில், அதை கூட்டி பேராயர் தீர்மானம் நிறைவேற்றியது என்பது தவறு என கூறி, 1ம் தேதி என்றும், பின்பு 3ம் தேதி என்றும் அறிவித்த மறுதேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டு, திருமண்டல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, டி.எஸ்.எப் அணியினரோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தி, இதையே கடைசி வாய்ப்பாக எடுத்துக்கொள்ளும்படி எச்சரித்து தவறும்பட்சத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதம பேராயர் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய
நிர்வாகிகள். (டி.எஸ்.எப்.) அணியினர் வட்ட கோயிலில் குருமார்கள் கூட்டம் நடத்தவுள்ளதாக ஒரு நாள்முன்பு அறிக்கை வெளியிட்டு கூட்ட ஏற்பாடு நேற்று செய்திருந்தனர்
அதற்குப் போட்டியாக தூத்துக்குடி சண்முகபுரம் ஆலயத்தில் வைத்துஅதே நாள் அதே நேரம் குருமார்கள் கூட்டம் நடைபெறுவதாக பேராயர் அறிக்கை வெளியிட்டுள்ளார்
ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் குருவானவர்கள் கூட்டம் என்று அறிவிப்புகள் வெளியாகியது நாசரேத் மண்டலத்தைச் சார்ந்த குருமார்கள் அனைவரையும் குழப்பமடைய செய்தனர். இதனால் திருமண்டல மக்களும் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த குழப்பமான சூழ்நிலை மாறவேண்டும் என கிறிஸ்தவர்கள் ஜெபிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் பத்து நாட்களாக பேராயர் அலுவலகத்திற்கும் பேராயர் இல்லத்திற்கு வருகை தராமல் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்யாமல் தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்த பேராயர் தேவசகாயம்
பிரதமர் பேராயரின் உத்தரவை மதித்து திருமண்டலம் வளர்ச்சியின் நலனை அக்கறை கொண்டு நேற்று இரவு 10.55. க்கு பேராயர் தேவசகாயம் கால்டுவெல் பள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு குடும்பத்தினரோடு வருகை தந்துள்ளார். என்ற இந்த செய்தி திருமண்டல மக்கள் மற்றும் சேகர மக்களுக்கு தெரியவர மகிழ்ச்சியில் திளைத்தனர் பத்து தினங்களாக நாசரேத் திருமண்டலத்தில் நடைபெற்ற உச்சகட்ட குழப்பமான சூழ்நிலை நாசரேத் திருமண்டல மக்கள் மற்றும் சபையோர் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது என்றும் தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் பேராயரின் உத்தரவை மதித்து பேராயர் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான
டி.எஸ்.எப் அணி தலைமையிலான நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்து பேராயர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார் என்று திருச்சபை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த இணைப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த பத்து தினங்களில் சினாட்லிருந்து இரண்டு கடிதங்கள் பிஷப் தேவசகாயம் அவர்களுக்கு வரப்பட்டுள்ளது
இதில்
28.10.2021 அன்று பிரதம பேராயர் விரிவான கடிதம் எழுதியுள்ள நிலையில், என்ன நடக்கப் போகிறது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் திருமண்டல மக்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில்
தென்னிந்திய திருச்சபையினர் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் விவகாரத்தை முழுமையாக உற்றுக் கவனித்து வந்த நிலையில் ஒரு அதிரடி திருப்பமாக
பத்து தினங்களுக்குப் பிறகு பேராயர் அவரது இல்லத்திற்கு வந்து திருமண்டல பணியை துவக்குவதற்கு வருகை தந்தது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் மற்றும் லே செயலாளர் கிப்சன் மற்றும் அவரது தலைமையிலான அணி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து
இன்று 31/10/2021 மாலை தூத்துக்குடி சுப்பிரமணிபுரம் ஆலயத்தில் நடைபெறும் திடப்படுத்துதல் ஆராதனையிலும்
01/11/2021 அன்று சுப்ரமணியபுரம் சகல பரிசுத்தவான்
களின் ஆலயத்தில் நடைபெறும் 175வது பிரதிஷ்டை நிகழ்ச்சிகளில் அதனை தொடர்ந்து அன்றைய தினமே தூத்துக்குடி நாசரேத் வெள்ளரிக்காய் பூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயம் 72 ஆவது ஆண்டு ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் புதிய ஆலய மங்கல படைப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் பேசப்படுகிறது இதுபோன்று தூத்துக்குடி நாசரேத் திரு மண்டலத்தில் உள்ள அனைத்து சேகரங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒற்றுமையுடன் பிஷப் மற்றும் புதிய நிர்வாகிகளான டிஎஸ்எப் அணியினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டால் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் கல்வி, சுவிசேஷம், மருத்துவம், என பலவகைகளில்
தென்னிந்திய திருச்சபையின் ஒரு முக்கிய அங்கமாக தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல விளங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்கின்றனர் திருமண்டல மக்கள்

Previous Post

பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல குருமார்கள்

Next Post

மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம்

Next Post
மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம்

மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In