நெல்லை மாநகரில் நெல்லை சந்திப்பு டவுன், வேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை ,
பெருமாள்புரம், ஹைகிரவுண்ட், மேலப்பாளையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் உள்ளன இவை தவிர நெல்லை பாளையங்கோட்டையில் குற்றப் பிரிவுக்கு தனியாக மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன மேலும் குற்றப்பிரிவுக்கு ஒரு துணை கமிஷனர் மற்றும் 2 உதவி கமிஷனர்கள் உள்ளனர் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை இவர்கள் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்
தற்போது வரும் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு இரண்டு ஒன்றாக இணைக்கப்படுகிறது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆகிய காவல் நிலையங்களுக்கு சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவுக்கு ஒரு உதவி கமிஷனரும், பெருமாள்புரம் மேலப்பாளையம் ஆகியவற்றுக்கு ஒரு உதவி கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளனர் இதேபோல் நெல்லை தச்சநல்லூருக்கு ஒரு உதவி கமிஷனர், டவுன் பேட்டைக்கு ஒரு உதவி கமிஷனர் என்று சட்டம் ஒழுங்கு மாற்றம் குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்படுகின்றனர் .சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு என்று தனியாக செயல்பட்டு வந்த நிலையில் இனி இவை இரண்டும் ஒன்றாக செயல்படும்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாலச்சந்திரன், மேலப்பாளையம் பெருமாள் புரத்துக்கு பாலமுருகன், நெல்லை தச்சநல்லூருக்கு விஜயகுமார், டவுன் பேட்டைக்கு அண்ணாதுரை, ஆகியோர் உதவி கமிஷ்னர் களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்
இதுகுறித்து மாநகர துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கூறுகையில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு இரண்டையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதற்கு வரும் 1ம் தேதி முதல் உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இனி அந்தந்த காவல் நிலையங்களிலேயே குற்றப்பிரிவு வழக்குகள் பதிவு செய்யப்படும் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து செயல்படுவார்கள் அதே நேரத்தில் நெல்லை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றார்.

