தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் அதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் திருமகனாரின் 114 ஆவது ஜெயந்தி குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில், தூத்துக்குடி 3 ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் முன்னாள் தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி.எம். செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மதியழகன், கோரம்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீநிநாயகம், தட்டப்பாறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுடலை, வக்கீல் சரவணன், கிளை கழக செயலாளர்கள் நவமணி, லூர்து பாண்டி, முத்துவேல், மாரிமுத்து, முருகன், இசக்கி, தங்கராஜ், ஆத்திமுத்து, பெரியநாயகம், மாணிக்கம், அய்யங்கனி, ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

