நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்த். இவர் தனது நண்பர் விஜய் சூர்யாவுடன் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரணியம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செம்போடை வடக்கு கடைத்தெரு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் புகுந்ததால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

