
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவிர்பட்டி பகுதியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து குழந்தைகளுக்கு விற்பனை செய்த நபரை கைது செய்து அதிரடி நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவலர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி எட்டயபுரம் நடுவிர்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் சரவணகுமார் (40) என்பவர் மளிகை கடை நடத்தி வந்த நிலையில் அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது குடோனில் 23 சாக்கு பைகளில் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து எதிரி சரவணகுமாரை கைது செய்து நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர் .
சிறப்பாக விரைந்து செயல்பட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

