தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் சிறக்கவும், தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து விதமான வணிகம் செய்துவரும் வணிகர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வியாபாரம் நடக்க வேண்டி சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
மகளிர் சக்திகள், 108, 1008 மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அன்னையின் அருட்பிரசாசம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சக்தி பீட துணைத்தலைவர் S.திருஞானம், பொருளாளர் அனிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

