நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் திருநெல்வேலி மாநகராட்சி சோயா காப்பகத்தில் இன்று நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். மாநகர பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை நெல்லை மாநகராட்சி மூலமாகவும் தன்னார்வலர் அமைப்புகள் மூலமாகவும் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு லயன்ஸ் கிளப் மற்றும் பல சேவை அமைப்புகள் மூலம் உணவு ,உடைகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது, திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்ட நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு மதிய உணவை வழங்கினார் மேலும் அவர் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாரகள். உடன் லயன்ஸ் கிளப், திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டார்

