நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று , நெல்லை மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் பெண்குழந்தைகள், சிறுவர்கள், ஆதவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு என அனைத்து மொத்தம் 17 காப்பகத்தில் இருந்து வந்த நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை கேட்டறிந்து, காப்பகங்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள் படுக்கை வசதி, மற்றும் பொருளாதாரம் போன்ற குறைகளை கேட்டறிந்து அணைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் உறுதியளித்தார்கள்.
இக்கூட்டத்தில் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் , நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் குழந்தைகள் நல தலைவர் சந்திரகுமார் , நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் , ACTU காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா , டவுன் மற்றும் பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் முத்துலட்சுமி மற்றும் ராமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் ( உதவி எண் : 1098 ) என்ற எண் குறித்த விழிப்புணர்வை வாசகங்களை வழங்கினார்

