நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் எல்லைக்குள் மட்டும் மீன்பிடிக்க வேண்டப்படுகிறது. மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்தால், இலங்கை கடற்படையின் நடவடிக்கை இருக்ககூடும் அல்லது ஏதாவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அறிவித்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நாகை மீன்பிடி படகு இரண்டு இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டது.
எனவே, இந்திய சர்வதேச கடல் எல்லைக்குள் / இந்திய கடற்பகுதியில் மட்டும் மீன்பிடிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறது. இலங்கை படகின் மீது இந்திய தமிழக படகு மோதி சேதம் ஏற்படுத்தியது ஒருபக்கம், இலங்கை மீனவர்கள் கோபம் மற்றும் போராட்டம் , இது வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பது புலப்படுகிறது மற்றும் தகவல் பெறப்படுகிறது. மேலும், இலங்கை மீனவர்களால் தாக்கப்படும் நிலை மற்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம் என மீன்வளத்துறையினரால் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
எனவே, சர்வதேச கடல் எல்லைக்குள் அல்லது இந்தியக் கடற்பகுதியில் மட்டும் மீன்பிடிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களை மீன்வளத்துறை கேட்டுக்கொள்கிறது.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

