• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

policeseithitv by policeseithitv
October 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சேத்துப்பட்டு பகுதியில் முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் வசிக்கும் மூசா, (வ/73), என்ற முதியவரை கடந்த 03.10.2021 அன்று, அங்கு வந்த சிலர் காரில் கடத்திச்சென்றுள்ளனர். மேலும் கடத்தல்காரர்கள் மூசாவின் மகன் ஷெரீப் என்பவரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து மூசாவின் மகன், கானத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

கடத்தப்பட்ட முதியவரை மீட்க, நீலாங்கரை உதவி ஆணையாளர் சுதர்சன் தலைமையில், சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சரவணகுமார் ராஜேஷ் மற்றும் முதல்நிலைக் காவலர் மகேஷ்வரன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர், மேற்படி வழக்கில் விசாரணை மேற்கொண்டதில், மூசாவிடம் வேலை செய்த குமார் (எ) அறுப்பு குமார் என்பவர், மேற்படி மூசாவிடம் அதிக பணம் இருப்பதை தெரிந்துக்கொண்டு, அவரை கடத்திச் சென்று, அவரது மகனிடம் பணம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

அதன்படி மேற்படி காவல் குழுவினர் மூசா குறித்து தேடுதலில் ஈடுபட்டு காரில் கடத்தப்பட்ட அவரைப் பத்திரமாக மீட்டு, அவரை கடத்திச் சென்ற குற்றவாளிகள் 1.குமார் (எ) அறுப்பு குமார், வ/44, திருவாரூர் மாவட்டம், 2.பிரகாஷ், வ/33, மயிலாடுதுறை மாவட்டம், 3.சங்கீதா, வ/28, மாதவரம் ஆகிய மூவரை எழும்பூரில் வைத்து கைது செய்தனர்.
மேற்படி குற்றவாளிகளிடமிருந்து பணம் ரூ.25,000/-, 10 கிராம் எடை கொண்ட 3 தங்க மோதிரங்கள், 3 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள், 1 டம்மி துப்பாக்கி, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Previous Post

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

கொடைக்கானல். பூண்டியில் போதை காளான் கஞ்சா விற்பனை, போலி மசாஜ் சென்டர் தாராளம் அச்சத்தில் பெண்கள் மற்றும் கிராம மக்கள்!!இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தனிப்படை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

Next Post
கொடைக்கானல். பூண்டியில் போதை காளான் கஞ்சா விற்பனை, போலி மசாஜ் சென்டர் தாராளம் அச்சத்தில் பெண்கள் மற்றும் கிராம மக்கள்!!இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தனிப்படை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கொடைக்கானல். பூண்டியில் போதை காளான் கஞ்சா விற்பனை, போலி மசாஜ் சென்டர் தாராளம் அச்சத்தில் பெண்கள் மற்றும் கிராம மக்கள்!!இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தனிப்படை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In