ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலமாக செல்ல வரும் பொதுமக்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் போதும், ரெயில் நிலையத்தில் செல்போன் ஜார்ஜ் போட்டு இருக்கும் போதும் செல்போன்கள் திருட்டு நடைபெறுவதாக தொடர்ச்சியாக பொதுமக்கள் புகார் தெரிவத்து வந்தனர். இதையடுத்து ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
மேலும் ஒவ்வொரு நடைமேடையாக சென்று கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவும் ஈரோடு ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த சவுடப்பன் என்பதும், ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போனை திருடியதையும் ஒப்புக்கொண்டார். சவுடப்பனிடமிருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

