கால் பைசா சம்பாத்தியம் என்றாலும் கவர்மெண்ட் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பழமொழி. அந்த கால் பைசா சம்பளமும் உழைக்காமல் பெற வேண்டும் என்ற நோக்கில் இருந்து வருகின்றனர் ஒரு சில அரசு அதிகாரிகள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகில் பேருந்து பஸ் நிலையம் உள்ளது. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க கூடிய இடத்தில் மின்கம்பம் உள்ளது திசைகாட்டும் விளம்பர பலகையும் உள்ளது செட்டியார் பூங்கா வில்பட்டி பள்ளங்கி நாயுடுபுரம் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லக்கூடிய இடங்களுக்கு பஸ் நிற்கும் இடமான இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத வகையில் மின்சார வயர்கள் நீட்டியபடி பழுதடைந்து காணப்படுகிறது.
குழந்தைகள், பள்ளி மாணவர்கள் தொட்டு விடும் உயரத்தில் இருப்பதால் பெரும் அபாயம் நடப்பதற்கு முன் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிரை காக்க வேண்டுமென அரசிற்கு அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சத்தோடு பேருந்துக்கு செல்பவர்களும் பொதுமக்களும் பல காலங்களாக பயத்தில் இருந்து வருகிறார்கள்.
அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக போராட்டம் நடத்தும், அரசு ஊழியர்கள் முதலில் தங்கள் வேலைகளை திறம்பட செய்யாமல் ஏனோ தானோ என்ற அலட்சியம் காட்டி வருவது வேதனையளிக்கிறது.
வீடுகளிலோ அல்லது கடைகளிலோ மின்சார கோளாறு ஏற்பட்டால் ஓடி ஓடி வேலை செய்யும் மின் ஊழியர்கள், நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில் ஆபத்தை வேறுபடுத்தும் வகையில் இருக்கும் மின் கம்பத்தை சரி செய்தால் கரன்சி நோட்டு பெற முடியாதே ன்ற எண்ணத்தில் இருப்பதாக முணுமுணுக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
கொடைக்கானல் பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகில் உள்ள மின் கம்பத்தினை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி தொகுப்பு: நமது சிறப்பு செய்தியாளர்

