நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை உட்பட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், குரங்கு ,குதிரை ,முயல், நரி என வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில் சரணாலயத்தை விட்டு ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்ததில் அந்த பெண் புள்ளிமான் காயடைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு வேதாரண்யம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து மானை சரணாலயப் பகுதிக்குள் விட்டனர். ஊருக்குள் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

