கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
__
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிகவும் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலமாகும் குரோனா தொற்று காலகட்டத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது தமிழக அரசு கடந்த அக்டோபர் 1 முதல் தளர்வு ஏற்படுத்தி சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு அனுமதி அளித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
விடுமுறையையொட்டி கொடைக்கானலில் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள், கார், சுற்றுலா வேன்களில் வந்தனர். இதனால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய டிஎஸ்பி சீனிவாசன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இருபுறமும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது, என்பதால் ஒருபுறம் மட்டும் வாகனங்களில் நிறுத்துமாறும் கொடைக்கானல் காவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் அதனை கட்டுப்படுத்த வாகனங்களை ஒழுங்குபடுத்த போதிய காவலர்கள் கொடைக்கானலில் இல்லை இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனம் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு கொடைக்கானல் வழிகாட்டிகள் மற்றும் கொடைக்கானல் வாகன ஓட்டுனர்கள் கூட்டு முயற்சியோடு செயல்பட்டால் போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என முடிவு செய்து கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் அவர்கள் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி அவர்களின் முன்னிலையில் இன்று
கொடைக்கானல் இந்து மகாஜன சங்கம் சி பாஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து கூட்டம் நடைபெற்றது

கொடைக்கானல் சுற்றுலா வழிகாட்டிகள் டாக்ஸி வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்
அனைவருக்கும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி சீனிவாசன் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை எங்கெங்கே நிறுத்த வேண்டும் ஒரே சைடில் வாகனத்தை நிறுத்துங்கள் என்பது போன்ற அறிவுரைகளை பயணிகளுக்கு கொடைக்கானல் சார்ந்த வழிகாட்டிகள் தெரிவித்தாள் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.
கொடைக்கானலில் போதிய காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென டிஎஸ்பி கேட்டுக்கொண்டார்கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவற்றின் அழகை பார்த்து ரசிக்க வருவதால் குறிப்பாக இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் நகரில் உள்ள பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது
இந்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த அறிவுரை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது டிஎஸ்பி அவர்களின் எளிமையான பேச்சு அவருடைய அணுகுமுறை ஆகியவற்றை கவனத்துடன் கேட்ட வழிகாட்டிகள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர் இந்த கூட்டத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு: கொடைக்கானல் ஐ எஸ் மோகன்

