• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

12 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

policeseithitv by policeseithitv
October 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
12 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 12 வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரி கைது – எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

மாசார்பட்டி காவல்நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 03.03.2004 அன்று கஞ்சா கடத்தல் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பயணித்த வழக்கில் இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தபாலன் மகன் யோகராஜ் (எ) அனுரா (48) மற்றும் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கேதார பிள்ளை மகன் விஸ்வலிங்கம் (எ) மதன்குமார் (46) ஆகியோரை மாசார்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் யோகராஜ் (எ) அனுரா என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில் மற்றொரு எதிரியான விஸ்வலிங்கம் (எ) மதன்குமார் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்தவருக்கு கடந்த 10.03.2010 முதல் பிடியாணை பிறப்பிக்கபட்டு 12 வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரியை விரைந்து கைது செய்யுமாறு விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையிலான தனிப்படையினர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் பதுங்கியிருந்த விஸ்வலிங்கம் (எ) மதன்குமார் என்பவரை கைது செய்தனர்.

எதிரியை கைது செய்த விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி சிறப்பு குடும்ப நல முகாம்

Next Post
இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி சிறப்பு குடும்ப நல முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In