தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவர் கள்ளச்சந்தைக்காரர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்டப்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர் செந்தில் ராஜ், ஆகிய நான் என்னிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பரிசீலித்ததிலிருந்து, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், சிலுவைப்பட்டி அஞ்சல், கணபதி நகர், கதவு எண். 310-ல் வசிக்கும் மந்திரமூர்த்தி மகன் தமிழ்மணி (33) என்பவர் 1980-ஆம் ஆண்டைய கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் (1980-ஆம் ஆண்டு மத்திய சட்டம் 7)-இல் கூறியுள்ளவாறு “கள்ளச் சந்தைக்காரர்” என்று நான் ஐயமறத் தெளிகிறேன்.
மேற்கூறிய இவர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கும் ஏற்பாட்டிற்கு விரோதமாக அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றிய விபரங்கள் தடுப்புக் காவல் ஆணைக்கான காரணங்களில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 1980ஆம் ஆண்டைய கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் வழங்குதல் பராமரிப்பு சட்டம் பிரிவு 3(1) உடன் படிக்கப்பட்ட பிரிவு 3(2)(அ) (1980ம் ஆண்டு மத்திய சட்டம் 7)-இன் கீழ் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், சிலுவைப்பட்டி அஞ்சல். கணபதி நகர். கதவு எண். 310-60 வசிக்கும் மந்திரமூர்த்தி மகன் தமிழ்மணி (33) என்று “கள்ளச்சந்தைக்காரர்”ஐ பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கும்படி இதனால் உத்தரவிடுகிறேன். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

