சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது..
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் இன்று.
இனிய தமிழை எளியநடையில் இயம்புகின்ற ‘தினத்தந்தி’ நாளிதழை தொடங்கி, படிக்காத பாமரனையும் படிக்க வைத்தார் சி.பா.ஆதித்தனார். அவரது மகன் சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை மட்டுமின்றி, விளையாட்டு, ஆன்மீகம், தொழில் என சகலகலா வல்லவராக திகழ்ந்தவர்.
தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை உலகில் மங்கா புகழ் பெற்றவர் சிவந்தி ஆதித்தனர்… பத்திரிகை மட்டுமல்லாமல், கல்வி, விளையாட்டு, ஆன்மீகம், சமுதாய மேம்பாட்டு பணிகளுக்காக இவர் செய்துள்ள.. அர்ப்பணித்துள்ள சேவைகள் ஏராளம்
அவரது புகழை போற்றும் விதமாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 86வது பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் மன்றத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு பத்திரிகையாளர் மன்ற கவுரவ ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான ஜெயா டிவி செய்தியாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கி ராஜா, கெளரவ ஆலோசகர் ஆத்திமுத்து, முன்னாள் சங்க செயலாளர் பிரபாகரன், மன்ற உறுப்பினர்கள் மாரிராஜா, சாதிக்கான், பேச்சிமுத்து மணிகண்டன், பொன்ராஜ் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

