கோவை ராஜ வீதியில் பீடா கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர உதவி ஆணையர் மணிகண்டனுக்கு ராஜவீதியில் உள்ள பீடா கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் அக்கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான நேமராம் (51) என்பவரிடம் நடத்திய விசாரணையில் பீடாவிற்க்குள் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இந்த விற்பனை இளைஞர்கள் மற்றும் வட மாநிலத்தவரை குறி வைத்து நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் நேமராம் மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய முருகன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

