பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் சங்கம் சார்பில் தென்மண்டல கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் பார்சன் கோர்ட் ஹோட்டலில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் மாநிலத் தலைவர் டாக்டர். மெர்சி செந்தில்குமார் மற்றும் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எம் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வதிலை எக்ஸ்பிரஸ் மற்றும் வதிலை வாய்ஸ் ஆசிரியரும் பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் நிறுவனர் பொதுச்செயலாளர் ஜனாப் கே. ரஃபீக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில பொருளாளர் பி பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் , மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பிஆர்ஓ வி பழனியப்பன், தென் மண்டல தலைவர் கோடை புயல் வி ஆனந்த், தென் மண்டல செயலாளர் எஸ் முகமது ரியாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வேஷ்டி சேலை மற்று அரிசி ஆகிய பொருட்களை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை பழனி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் ஏஎஸ்பி ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பழனி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோருக்கு பிரஸ் & மீடியா பீப்பிள் அசோசியேசன் நிறுவனர் கே ரஃபீக் முகமது நினைவுப் பரிசுகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் டயல் மற்றும் பத்திரிகையாளர் அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எம் ரியாஸ் தீன் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் பேசியதாவது ஒரு பத்திரிகையாளர் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவுவது பெரும் மகிழ்ச்சியான விஷயம் இந்த அமைப்பின் செயல்பாடுகள் மக்கள் பயன் அடையும் வகையில் இழந்து வருவது பெருமை அளிக்கிறது அமைப்பு நிர்வாகிகள் மனித நேயத்தோடு இன்னும் பல உதவிகள் செய்ய முன்வர வேண்டும் என அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார்.
செய்தி தொகுப்பு: கே. ரபீக் அஹமது

