செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் சுலோசனா நகர் ரேவதிபுரம் 6-வது தெருவில் சுமார் 160 குடும்பங்கள் குடியிருக்கிறார்கள்.. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என சுமார் 900 பேர் வசிக்கிறார்கள்.. இங்கு சில மாதங்களாக குடியிருப்பு பகுதியில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. குடியிருப்பு பகுதியில் நடுவிலே பல வருடங்களாக பராமரிக்கப்படாத வாழைத்தோட்டம் மற்றும் பராமரிப்பில்லாத வயல் நிலமும் உள்ளது. இந்த பாம்புகளால் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாகவும் மக்களின் சார்பாகவும் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ராஜேந்திரன் உதயகுமார் சதீஷ்குமார்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடமும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அவர்களிடமும் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா அவர்களிடமும் இந்த பகுதி மக்களுடைய பாதுகாப்பிற்கும் பயமில்லாமல் பயணம் செய்வதற்கு ம் சிதலமடைந்த சாலைகளை சீரமைத்து தருமாறும் விஷப்பாம்புகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக்கள் அளித்தார்கள்..

