தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமைவகித்தார் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநகரச் செயலாளர் உதய சூரியன் வரவேற்புரையாற்றினார் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மற்றும் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் பிறந்தநாள் விழா சமத்துவ மக்கள் கழகம் துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களில் தூத்துக்குடி மாவட்ட மண்ணின் மக்களுக்கு மட்டும்தான் கடைகள் வாடகைக்கு கொடுக்க வேண்டும் தூத்துக்குடி மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க விவிடி சிக்னலில் மேம்பால பணியினை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கேற்ப தூத்துக்குடியின் புறநகரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சதாசிவம் மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரகாஷ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் துணைச் செயலாளர்கள் பொன்மணி, முத்துலட்சுமி, பத்மா, மாநகர துணை செயலாளர் மதியழகன் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

