தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பென்சன் சட்ட விதிகளின்படி குறைந்த பென்சன் ரூ 7850 ஆக வழங்க வேண்டும், அனைத்து அரசு ஓய்வூதியர்களுக்கு உள்ளது போல குடும்ப ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு. மருத்துவப்படி, அகவிலைப்படி போன்றவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் துவக்கவுரை ஆற்றினார். வேதாரண்யம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயலாளர் அரங்கநாதன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மேலும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த ராமமூர்த்தி, துர்க்காம்பிகா, ரமேஷ், குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேதாரண்யம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் போசன் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

