கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்று கிழமை (12.09.2021) அன்று 500 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்று கிழமை (12.09.2021) அன்று மாபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறயுள்ளது. இதற்காக சுமார் 500 முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 30000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்திட உத்தேசிப்பட்டுள்ளது. இந்த முகாம்மில் 18 வயது மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இராண்டாம் தவணை தடுப்பூசி எடுக்காதவர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மீனவ பெருமக்கள், கர்பிணி பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள் ,மாற்றுதிறனாளிகள், நீரிழிவு நோய் மற்றும் இரத்தகொதிப்பு உள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நமக்கு கொரோனா 3 ஆம் அலையிலிருந்து காப்பதற்பான ஒரே ஆயுதமான தடுப்பூசி தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள 19 இடங்களிலும், நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளதாக நகராட்சி ஆணையர் லதா தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

