• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!!

எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை

———

ஆப்பாயில்’ வர தாமதமானதால் போதையில் ஓட்டலை சூறையாடிய இரு போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ரோட்டில் ராம்குமார், 39 என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த, 6ம் தேதி இரவு 10:00 மணிக்கு, தஞ்சாவூர் ஆயுதப்படை ஏட்டு பாலசுப்ரமணியன், 45, அவரது நண்பர்கள் திருவிடைமருதுார் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர் அருண்குமார், 30 மற்றும் எலக்ட்ரீஷியன் விஜி, 35 ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். போதையில் இருந்த மூவரும், ஆப்பாயில் கேட்டுள்ளனர்.

ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆப்பாயில் வழங்க தாமதமானது.ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன், அவரது நண்பர்கள் சப்ளை செய்து கொண்டிருந்த, ராம்குமாரின் 15 வயது மகன் ஹரீஸ் என்பவரை ஆபாசமாக திட்டி, தலையில் சாம்பாரை கொட்டினர். சேர்களை எடுத்து வீசி, டேபிள் உள்ளிட்ட பொருட்களை நொறுக்கினர். தடுக்க முயன்ற ராம்குமார், அவரது மனைவி மணி, 35 ஆகியோரை மூவரும் தாக்கினர். பின் காரில் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது, விஜி வேகமாக காரை எடுக்க, கீழே நின்ற பாலசுப்ரமணியன், அருண்குமார் மீது மோதியது.இதில், பாலசுப்ரமணியனின் இடது காலில் எலும்பு முறிவும், அருண்குமாரின் தலையில் காயமும் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக, ராம்குமார் அளித்த புகார்படி, தஞ்சாவூர் பல்கலை போலீசார், பாலசுப்ரமணியன், அருண்குமார், விஜி ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பாலசுப்ர மணியன், அருண்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து,எஸ்.பி., ரவளிப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

Next Post

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற ஆன்லைன் மூலமாக வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

Next Post
இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற ஆன்லைன் மூலமாக வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In