வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு
வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (58). இவர் கடந்த 5ம் தேதி கடைத்தெருவில் அசிங்கமாக பேசிக் கொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதையொட்டி ஏற்பட்ட தகராறின் போது மனோகரன் காயமடைந்ததையொட்டி அவர் வேதாரண்யம் மற்றும் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோகரனை தாக்கிய திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

