ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு வழங்கி கூறியதாவது:
குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளை நிலம் கொண்ட பூமி. இங்கு சிலர், விளை நிலத்தில் மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அனுமதி தந்தால் விளை நிலங்கள், நிலத்தடி நீராதாரம் பாதிக்கும். குரங்கன் ஓடையில் சாயக்கழிவை வெளியேற்றும் வாய்ப்பு ஏற்படும். எனவே சாயப்பட்டறைக்கு அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு கூறினர்.
