மீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்
செப் 8
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கோடியகரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க செல்லும்போது அடையாளம் தெரியாத இலங்கையை சேர்ந்த நபர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டும், மீன்பிடி உபகரணங்கள் அபகரித்து செல்வதுமாக உள்ளது. மேலும் மீனவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இந்திய இலங்கை கடற்பரப்பின் எல்லை விபரம் நாகப்பட்டினம் முதல் தனுஷ்கோடி வரை பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

வ.எண் Latitude (அட்சரேகை) Longitude (தீர்க்க ரேகை)
1 100 49’ 50” N 0810 22’ E
2 100 32’ N 0800 46’ 50” E
3 100 36’ N 0800 52’ E
4 100 05’ 50” N 0800 05’ E
5 090 57’ N 0790 35’ E
6 090 40’ N 0790 22’ 80” E
7 090 21’ 50” N 0790 31’ E
8 090 07’ N 0790 32’ E
எனவே மேற்குறிப்பிட்ட இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது
எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மீனவர்கள் மீன்பிடிக்கும்போது தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும்
உயிர்காப்பு சாதனங்கள் கொண்டு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலில்
அசாதாரண சூழ்நிலை ஏற்படும்போது அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி
எண்களான கடலோர பாதுகாப்பு குழுமம் எண்:1093, கடலோர கப்பல் படை உதவி
எண்:1554 மற்றும் கம்பியில்லா தொலைதொடர்பு சாதனத்தின் அலைவரிசை எண்:16-ஐ
தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ்
கேட்டுக்கொண்டுள்ளார்.
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்
