தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது – 124 மதுபாட்டில்கள் பறிமுதல்.
*தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (04.09.2021) புதுக்கோட்டை, குலசேகரபட்டினம், ஆத்தூர், செய்துங்கநல்லூர், ஏரல், பசுவந்தனை, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 8 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 124 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.*
*இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

