• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தலையணையை குப்பையில் வீசிய ஆட்டோ ஓட்டுநர் – தலையணையில் ரூ.90000 வைத்து பயணம் செய்த பெண்மணி

policeseithitv by policeseithitv
September 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தலையணையை குப்பையில் வீசிய ஆட்டோ ஓட்டுநர் – தலையணையில் ரூ.90000 வைத்து பயணம் செய்த பெண்மணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எண்ணூர் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, மணிலிபுதுநகர் பகுதியில் டெல்லியைச் சேர்ந்த முகமது வசீம் (எ) பப்பு (வ/35), என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த அவரது அம்மா சந்தாபீ (பெ/55) என்பவரை வழியனுப்பி வைப்பதற்காக கடந்த 30.08.2021 அன்று மாலை முகமது வசீம் (எ) பப்பு தனது மனைவி மற்றும் தாய் சாந்தபீயுடன் ஒரு ஆட்டோவில் ஏறி விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர். பிறகு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் ரயிலில் தனது தாய் சந்தாபீ (55) என்பவரை ஏற்றி விட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சாந்தாபீ இரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் ரூ.90 ஆயிரம் பணத்துடன் அடங்கிய தலையணையை தேடியுள்ளார். பணத்துடன் கூடிய தலையணை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்த சாந்தபீ உடனே அவரது மகன் முகமது வசீம் (எ) பப்புவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

முகமது வசீம் (எ) பப்பு மேற்படி சம்பவம் குறித்து எண்ணூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து எண்ணூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜி, முதல் நிலைக்காவலர் வேலுசாமி, மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் தாமோதரன் ஆகிய மூவரும் மணலிபுதுநகர் ஆண்டாள் குப்பம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலிருந்து தலையணையை யார் வைத்தது என்பது தெரியாமல் ஆண்டாள் குப்பம் பகுதியில் உள்ள குப்பையில் வீசி சென்றதாக தெரிவித்துள்ளார். உடனே மேற்படி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் கூறிய இடத்தில் தேடி ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணையை கண்டுபிடித்து சாந்தபீயின் மகன் முகமது வசீம் (எ) பப்புவிடம் பத்திரமாக ஓப்படைத்தனர்.

பயணி ஆட்டோவில் தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது – 124 மதுபாட்டில்கள் பறிமுதல்

Next Post

விளாத்திக்குளம் பகுதியில் குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது –

Next Post
விளாத்திக்குளம் பகுதியில் குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது –

விளாத்திக்குளம் பகுதியில் குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது -

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In