*மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 10 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது.*
*♻ தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.*
*♻ அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (03.09.2021) மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 67 J 5682 என்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50 கிலோ எடையுள்ள 10 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.*
*♻ உடனடியாக போலீசார் மேற்படி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்களான காணநாதன் மகன் கணேச பாண்டி (24) மற்றும் கண்ணன் மகன் கார்த்தி (24) ஆகிய இருவரையும் கைது செய்து, மேற்படி வாகனத்தையும், 10 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்*


