தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணியிலிருக்கும்போது உடல்நல குறைவால் மரணமடைந்த ஊர்காவல் படை காவலர் செந்தில்வேல் முருகன் என்பவரது குடும்பத்திற்கு ஊர் காவல் படை குடும்ப நிவாரண நிதி ரூபாய் 15,000/- க்கான காசோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார். கடந்த 03.03.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிந்த காவலர் செந்தில்வேல் முருகன் (40) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு ஊர் காவல் படை குடும்ப நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 15,000/- வழங்கப்பட்டுள்ளது.
இன்றுமாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காலமான ஊர்காவல் படை காவலர் செந்தில்வேல் முருகன் என்பவரின் மனைவி மற்றும் வாரிசுதாரரான . சுந்தரி என்பவருக்கு மேற்படி ரூபாய் 15,000/- கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர் ராபர்ட், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் . பேச்சிமுத்து மற்றும் உதவியாளர் . ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

