தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் விவகாரம்:
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக புகார் . சர்ச் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
நாளை நடைபெறும் தேர்தலை கண்காணிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் கிறிஸ்தவர்கள் கோரிக்கை
———
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் நாளை 16ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் வாக்காளர்களின் பட்டியியலில் இருந்து பலர் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அதே சபையினரே புகார் சொல்லி வருகிறார்கள். நாளை காலையில் தேர்தல் வாக்குபதிவு நடைபெற இருக்கும் வேளையில், தங்கம்மாள்புரம் பகுதியில் நீக்கப்பட்டிருக்கும் சுமார் 14 பேர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் ஜெபஸ்டின் உட்பட சுமார் 20 பேர்கள்.
தங்கம்மாள்புரம் சர்ச் கோபுரத்தில் ஏறி நின்று, ’’பிஷப்பும், ஐயர்வாலும் இங்கே வரவேண்டும். நீக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்’’ என்று கோஷம் எழுப்பி வருகிறார்கள். ஆனால் சபை சார்பில் யாரும் வரவில்லை. காவல்துறையினர் மட்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. நாளை நடைபெறும் திருமண்டல தேர்தல் அமைதியாக நடைபெற தூத்துக்குடி எஸ்பி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரடியாக ஒவ்வொரு ஆலயமாக பார்வையிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முன்வரவேண்டும் என கிறிஸ்தவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

