திங்கள் கிழமை எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 விழிப்புணர்வு பிரச்சார வாரதின் 2-ம் நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.
கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கோவிட் -19 விழிப்புணர்வு வாரம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு வாரத்தின் 2-ம் நாளான இன்று எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கைகளை கழுவி தூய்மையாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது , மேலும் முகக்கவசம் மற்றும் சமூகஇடைவெளி கடைபிடிப்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திரு.ஐயப்பன் அவர்கள், மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கணேசன் அவர்கள், கீழஈரால் ஆரம்ப சுகாதாரதுறை மருத்துவர் திரு.கார்த்திக் அவர்கள், நடமாடும் மருத்துவக்குழு,தூய்மை பணியாளர்கள் காவல்துறை ஆளினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


