• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

policeseithitv by policeseithitv
July 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் ‘VIRASAT’’என்ற கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேற்படி கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/-மும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்குரூ.1,20,000/-மும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 4% வட்டி வீதத்திலும் ஆண்களுக்கு 5% வட்டிவீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். அவ்விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் 90% தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் (NMDFC), 5% தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO), மீதமுள்ள 5% விண்ணப்பதாரரின் தொகையும் அடங்கும். கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறவிரும்புவோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
Previous Post

முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம்

Next Post

போலி கொரோனாசான்றிதழ் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஐந்து நபர்கள் கைது

Next Post
ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

போலி கொரோனாசான்றிதழ் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஐந்து நபர்கள் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In