கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி.ஐ.பி.எஸ்., உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி கிருத்திகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தணிக்கை செய்ததில் 20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது செய்து அவர்களிடம் இருந்து 29 நாட்டுதுப்பாக்கிகளை பறிமுதல்செய்தனர்.
கைது செய்யப்பட்ட 20 பேரையும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

