மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் குரு காட்டூர் கிராமத்தில் நடைபெற்றது குரு காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி ராஜ்குமார் தலைமையில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் முன்னிலையில் எம்.எஸ்.எம்.இ, கே.வி.ஐ.சி, பனை வெல்லம் ஆராய்ச்சி மற்றும் பனை பொருள் பயிற்சி மையம் உதவி இயக்குனர் திருமிகு பிரபாகரன் சமூகநலத்துறை மகளிர் நல அலுவலர் திருமதி வீரம்மாள் சைல்டு லைன் 1098 கள ஒருங்கிணைப்பாளர் திருமதி கனகா ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் லீடு டிரஸ்ட் இயக்குனர் திருமதி எஸ் பானுமதி அவர்கள் நன்றி கூறினார்


