• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண்களுக்கான உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

policeseithitv by policeseithitv
July 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண்களுக்கான உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகரிலுள்ள பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு முன்னிட்டு ” பாதுகாப்பான நகரத் திட்டங்கள் ” ( Safe City Projects ) அமல்படுத்தப்படுகிறது . இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 விகிதாசாரப்படி தேவையான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு ” நிர்பயா பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் ” ஒன்று சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் சிறப்பான ஆலோசனை வழங்கும் பொருட்டு சமூக ஆலோசகர் , சட்டரீதியான ஆலோசகர் மற்றும் குழந்தை மனநல ஆலோசகர் என இப்பிரிவில் மூன்று ஆலோசகர்கள் மேலும் ஒரு வரவேற்பாளர் என நான்கு பேர்கள் சமூக நலகுழுமம் ( வாரியம் ) மூலம் முறையாக தேர்வு செய்யப்பட்டு மேற்குறித்த ஆலோசனை மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை மையம் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,திறந்து வைத்‌‌‌தார்‌‌‌ ஷம்புகலோலிகர் , இ.ஆ.ப. , அரசு முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை மற்றும் ரத்னா, இ.ஆ.ப., இயக்குநர் சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்கிற குடும்ப வன்முறை, வரதட்சணை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் ( 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் மற்றும் பெண்கள் உதவி எண் 181 ( Help Line ) மூலம் புகார் தெரிவிக்கும் பெண்கள் மட்டும் மேற்குறித்த ஆலோசனை மையத்திற்கு அழைத்து வரப்பட்டு பயிற்சி பெற்ற இந்த சிறப்பு ஆலோசகர்கள் மூலம் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும் .

Previous Post

விளாத்திகுளம் பகுதியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

Next Post

20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

Next Post
20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது - 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In