விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இரவு வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின் பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை செய்தார்கள்*
அப்பொழுது குளத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட கலைஞணாபுரம் கிராமத்தில் கடற்கரை ஓரத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளிடம் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் விளாத்திகுளம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் உத்தரவில் குளத்தூர் ps சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா மற்றும் காவலர்கள் சென்று சோதனை செய்த போது அங்கு நின்று கொண்டு இருந்த TN69 AP 8495 என்ற டாரஸ் லாரியில் மணல் அள்ளும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டு இருந்தவர்கள் காவலர்களை பார்த்ததும் ஓடினார்கள். அதில் மூன்று நபர்களை சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து தப்பி ஓடிய நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது*

திறமையாக பணிசெய்த குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்பையா மற்றும் காவலர்களை விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்*

