புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக, புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கூர் பரிசுத்த பேட்ரிக்ஸ் சேகரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை குருவானவரும், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் குருத்துவ செயலருமான மோசஸ் ஜெபராஜ், உதவி குருவானவர் மோசஸ், புதிதாக குருப்பட்டம் பெற்றுள்ள ஜெபஸ்டின் ஆகியோருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த இருபெரும் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை குருவானவர் மோசஸ் ஜெபராஜ் ஜெபம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி தலைமையுரையாற்றினார். உதவி குருக்கள் மோசஸ், ஜெபஸ்டீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தூய பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் தலைவர் இன்ஸ்டீன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) பிரின்ஸ், நிர்வாக அலுவலர் தனசிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் பொருளாளர் ஞானதுரை நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயம் நலன் விரும்பும் ஐக்கியத்தின் தலைவர் டி.இன்ஸ்டீன், பொருளாளர் ஞானதுரை, எடிசன் சாமுவேல், தியாகராஜன், எட்வர்ட், ரவி, லாரன்ஸ், ஐசன்பாபு, பெயித்ராஜ், மனோகர், ஜோசப், ஜெபமணி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து

