திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
——————————
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம் அவர்கள் திருவாடானை சேர்மேன் முகம்மது முக்தார் அவர்களை நேற்று எஸ்பி பட்டணத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்கள் அப்போது திருவாடானை யூனியன் சேர்மன் மற்றும் எஸ்பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பளித்தனர் எஸ்பி பட்டணம் ஊராட்சிதலைவரின் சார்பில் சகுபர்சாதிக் அவர்க ள் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அனிவித்து மரியாதை செய்தார்கள் அதனைத் தொடர்ந்து திருவாடானை யூனியன் மற்றும் எஸ்பி பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையான குடிதண்ணீர் மற்றும் சாலைவசதிகளை சீர் செய்து கொடுக்கவும் அதற்காக திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது கோரிக்கை மனுவை எஸ்பி பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தார் இந்த சந்திப்பின்போது
காங்கிரஸ் கமிட்டி தலைவர் சாம்பு அலி மலை அப்துல்பாக்கி அயூப்கான் கா.நெ.பாரூக்அலி சத்தார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

