திருடுபோன மற்றும் காணாமல் போன சுமார் ரூபாய் 5 லட்சத்தி 4 ஆயிரம் மதிப்புடைய 43 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார்.
திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் தொலைந்துபோனது சம்பந்தமாக 2020 – ம் ஆண்டு பெறப்பட்ட 6 மனுக்கள் மற்றும் 2021 – ம் ஆண்டு பெறப்பட்ட 38 மனுக்கள் மீது திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூபாய் 5 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 43 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 24-06-2021 தேதி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவீன்குமார் அபினபு இ.கா.ப மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் ராசராசன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சுரேஷ்குமார் அவர்கள் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆணையாளர் ஆறுமுகம் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் அவர்கள், நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்.ஜெயப்பிரகாஷ் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

