தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக லோன் வாங்கியுள்ளனர். இப்படி வாங்கிய லோன் பணத்தை மக்கள் வாரந்தோறும் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இதனால் பொது மக்கள் வேலைக்கு செல்ல இயலாததால் தவணைத் தொகையையும் செலுத்த முடியவில்லை. அதனால் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்டு வருவதால் மக்கள் டென்ஷன் அடைந்து வருகிறார்கள்.இது சம்பந்தமாக தூத்துக்குடி டவுண் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள் சார்ந்தவர்கள் திரளானோர் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அவர்களிடம் புகார் தெரிவித்ததாவது “உலகமே கரோனா வைரஸை கண்டு பயப்படும் சூழ்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு ஏற்று நோய் பரவாமல் இருக்க வேலைக்கும், வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கின்றோம். அப்படி இருக்கும் போது மகளிர் சுய உதவி குழு அதிகாரிகள் தவணை தொகையை உடனே செலுத்தச் சொல்லி மிரட்டுகின்றனர். உடனே நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்றுமாறு மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர் 
ஆனால் பொதுமக்களாகிய நாங்கள் தவணை தொகையை தடை உத்தரவு முடிந்த பிறகு செலுத்துக்கின்றோம் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு முடியாது என்றும் உடனே செலுத்தச் சொல்லி வற்புறுத்துகின்றனர். கரொனா பீதியால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது லோன் செலுத்தச் சொல்லி சுய உதவிக் குழு அதிகாரிகள் மிரட்டியது கிருஸ்ணராஜபுரம் ராஜீவ்நகர் போன்ற அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுய உதவிக் குழுக்கள் மூலமாக லோன் வாங்கியுள்ள மக்களை மிரட்டி பணம் கேட்டு கெடுபிடி செய்யும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைத்து போராட வேண்டிய சூழல் ஏற்படும் என மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூத்துக்குடி டவுண் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள் சார்ந்தவர்கள் கொடுத்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்
செய்தி தொகுப்பு
ஆத்திமுத்து
அருண்

