• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபலமான திமுக வழக்கறிஞருக்கு!! ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்கப்படுமா ? தென் மாவட்ட திமுகவினர் எதிர்பார்ப்பு

policeseithitv by policeseithitv
June 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபலமான திமுக வழக்கறிஞருக்கு!! ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்கப்படுமா ? தென் மாவட்ட திமுகவினர் எதிர்பார்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என தெரிகிறது. மூன்று பதவிகளையும் திமுகவே கைப்பற்றும் என்பதால் அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்.பி., யாக இருந்த முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதத்தில் மரண மடைந்தார். அவரது பதவி காலியாக உள்ளது. அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் உள்ளன.
அதேபோல், அதிமுக ராஜ்யசபா எம்.பி., க்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆகிவிட்டனர். இதனால், இருவரும் தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் வைத்தியலிங்கம் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டும், முனுசாமி பதவி காலம் முடிய 5 ஆண்டுகளும் உள்ளன.

தற்போது காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மூன்று பதவிகளுக்கும் தனித்தனியே தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள மூன்று எம்.பி., பதவிகளுக்கும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள திமுகவுக்கு கிடைக்கவே வாய்ப்பு உள்ளதால் அப்பதவியை பெற திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று  ராஜ்யசபா எம்.பி., பதவிகளை  தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அதேவேளையில் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத மற்றும் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருபவர்களுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தென் மாவட்டத்திலிருந்து கழகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில், நடந்து முடிந்த 6 சட்டசபை தொகுதிகளில் கோவில்பட்டி  தவிர மீதி 5 சட்டசபை தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், ஸ்ரீவைகுண் டம் தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து  அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரை அமைச்சர்களாக்கி தூத்துக்குடி மாவட்டத்திற்கு  இரண்டு அமைச்சர்களை தந்திருப்பது மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு உற்றாசகத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்தோருக்கு டெல்லியில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது கவலையளிப்பதாகவும், ஆகவே, காலியாக உள்ள மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றையாவது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவருக்கு ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர்.

கடந்த 2015 ல் தூத்துக்குடி மதிமுக மாவட்ட செயலாளராக இருந்த ஜோயல், அண்ணா அறிவாலயத்தில் அப்போதைய திமுக தலைவர் கருணா நிதி மற்றும்  மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி கட்சியில் வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து தமிழகம் முழுவதும் இளைஞர் அணியில் எழுச்சியை ஏற்படுத்திய வழக்கறிஞர் ஜோயல் திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குட் புக்கில் இருக்கும் இவர் உதயநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் அதோடு ஜோயல் சென்னையில் திமுக தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் சூழல தொடங்கினார்.
மேலும் திமுக இளைஞர் அணியில் நல்லதொரு எழுச்சிகள் காணும் வகையில் அவரது செயல்பாடு இருப்பதால் முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழி எம்பி ஆகியோரின் குட் புக்கில் இடம்பெற்றார் ஜோயல்

அதிமுக, அமமுக, ஆகியவற்றில் இருந்து சமீபத்தில் விலகி வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியும் , செந்தில் பாலாஜிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி அமைச்ச ராக்கியும், அதிமுக வில் இருந்து விலகி வந்த மார்க்கண்டேயனுக்கு விளாத்தி குளம் தொகுதியில் வாய்ப்பு வழங்கி சட்டமன்ற உறுப்பினராக்கி அடையாளப் படுத்தி கௌரவித்திருக்கும் திமுக தலைமை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓர் இளம் துடிப்பு மிக்க மாவட்ட செயலாள ராகவும், கருஞ்சிறுத்தை என திமுக கட்சியினரால் வர்ணிக்கப்பட்டு சுறுசுறுப்பு ஆற்றலோடு விளங்கிய வழக்கறிஞர் ஜோயலுக்கு தற்போது வரை எந்தவொரு மக்கள் பிரதிநியாகும் வாய்ப்பை திமுக தலைமை வழங்காமல் இருப்பது ஜோயலுடைய ஆதரவு மற்றும் அனுதாபிகளிடையே குறிப்பாக தென் மாவட்ட திமுக சார்ந்தவர்கள் இந்த முறை அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் வழக்கறிஞர் ஜோயளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கருணைப் பார்வை கிடைக்கும் எனவும் அவர் இந்த முறை தென் மாவட்டத்தின் சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது தென்மாவட்ட திமுக கட்சியினர் மத்தியில் தற்போது இந்த விஷயம் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது


எனவே, காலியாக உள்ள  மூன்று எம்.பி., பதவிகளில் காலியாக உள்ள ஒன்றை வழக்கறிஞர் ஜோயலுக்கு ஒதுக்கிட தலைமை முன் வர வேண்டும் என்ற குரல் தென்மாவட்ட திமுகவில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. இளைஞர் அணியில் மிகச் சிறப்பாக செயல்படும் ஜோயல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் கனிமொழி எம்பி என அனைவருடைய நன்மதிப்பையும் பெற்றிருப்பதால் எம்.பி.யாக
ஜோயல்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கலைஞரின் முரட்டு பக்தன் என் பெரியசாமி குடும்பத்திற்கு குறிப்பாக அவரது மகள் கீதா ஜீவனுக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பதவியும் சமூகநலத்துறை அமைச்சர் பதவியும் மு க ஸ்டாலின் வழங்கியுள்ளதால்
ராஜ்யசபா எம்பி பதவி தென் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி மாநில நிர்வாகி வழக்கறிஞர் ஜோயலுக்கு அடிக்க போவது யோகம் என்கிறார்கள் தென் மாவட்ட திமுகவினர்.

மொத்தத்தில் காலியாக உள்ள மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றையாவது தென்மாவட்டத்திற்கு, அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாவட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிருந்து ஒலிக்கப்படும் கழகத்தினரின் குரல்களுக்கு திமுக தலைமை செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் திமுக இளைஞரணி தீவிரமாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர்களுக்கு இந்த முறை ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்கும் என பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது.

செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

Previous Post

இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார்.

Next Post

இரவு ரோந்து காவலர்கள் ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

Next Post
இரவு ரோந்து காவலர்கள் ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

இரவு ரோந்து காவலர்கள் ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In