தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், தலைமையில் இன்று (23.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, தனது சொந்த நிதியில் இருந்து 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.
மேலும், முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கனிமொழி எம்பி, முகாமில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அனைத்து உதவிகளும் உரிய அலுவலர்கள் மூலம் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், வசந்தா, முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாம் தலைவர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

