தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (42). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் (21) என்பவரது மாமா முத்து என்பவரை சிலருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
இந்த முன்விரோதம் காரணமாக மேற்படி விஜயகுமாரும், அவரது நண்பர்களான தெர்மல்நகர் கேம்ப்2 பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி(21) மற்றும் தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (20) ஆகிய மூன்று பேர் சேர்ந்து நேற்று (15.06.2021) சங்கரின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், திரு. செந்தில், திரு. திருமணி மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எதிரிகள் விஜயகுமார், உதயமூர்த்தி மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு அரிவாளை கைப்பற்றினர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிரியை கைது செய்த தனிப்பனியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

