தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமாட்சி அம்மன் மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 120 பேருக்கு இன்று (16.06.2021) அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் உத்தரவின்பேரில், குளத்தூர் காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. கங்கைநாத பாண்டியன், திரு. சுப்பையா உட்பட காவல்துறையினர் மற்றும் குளத்தூர் பியர்ல்சிட்டி மீன் கம்பெனி உரிமையாளர் திரு. முத்துவிநாயகம், வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் திரு. லட்சுமணன், டீ.சுப்பையாபுரம் பஞ்சாயத்து தலைவர் திரு. ராமசுப்பு, புளியங்குளம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.


