தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கட்டளைதாரர்கள் மற்றும் காவல்துறை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 30 தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இன்று (14.06.2021) தருவைக்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை தருவைக்குளம் கிராம கட்டளைதாரர்கள் மற்றும் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், தருவைக்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


